Close
ஆகஸ்ட் 3, 2026 7:07 மணி

நாமக்கல் கொ.ம.தே.க., சார்பில் தீரன் சின்னமலை நினைவுதின பேரணி

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக சார்பில், காந்தி சிலை அருகில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் கொமதேக சார்பில் பேரணி நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், 221ம் ஆண்டு நினைவு தினம், கொ.ம.தே.க., சார்பில், ஈரோடு மாவட்டம், ஓடாநிலை மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் அனுசரிக்கப்படுகிறது.

அதையொட்டி, நாமக்கல் தெற்கு மாவட்ட கொ.ம.தே.க., சார்பில், பேரணி, நாமக்கல் – பரமத்தி ரோடு கொங்கு திருமண மண்டபத்தில் துவங்கி, கோட்டை ரோடு வழியாக காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.

தொடர்ந்து, அங்கு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் துரை தலைமை வகித்தார். மாநில ஆட்சிமன்ற குழு உறுப்பினர் மணி, மாநில செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளானவர்கள் தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் டூ வீலர்கள், கார்கள் மற்றும் வேன்களில் திரளான கொமதேகவினர் சங்ககிரி மற்றும் ஓடாநிலைக்கு பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது, ஏராளமான இளைஞர்கள் டூவீலரில் அலறும் சைலன்சரை பொருத்திக்கொண்டும், வீலிங் செய்தபடியும், வாகனங்களில் நின்றபடியும், கார் கதவில் அமர்ந்தும் பயணம் செய்தனர்.

இது, பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்ததுடன், போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top