Close
ஆகஸ்ட் 23, 2026 3:26 காலை

நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலவரையின்றி தொடரும் இப்போராட்டத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிட்டங்கி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள 9 நுகர் பொருள்வாணிபக் கழக கிட்டங்கிகளிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து பேச்சுவார்த்தை மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top