நாமக்கல் முதலைப்பட்டி புது பேருந்து நிலையம் அருகில், மாநகராட்சி சார்பில் முட்டை வடிவ அலங்காரத்துடன் கூடிய போக்குவரத்து ரவுண்டானா அமைக்ககப்படுகிறது.
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, முதலைபட்டி புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகில், நகருக்கு செல்லும் மெயின் ரோட்டில், நகரை பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், வாகனங்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், இரண்டு சாலைகளுக்கு நடுவே போக்குவரத்து ரவுண்டாணா அமைக்கப்படுகிறது.
நாமக்கல் நகரின் நுழைவு வாயிலான இப்பகுதியில், வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையிலும், முட்டை நகரம் நாமக்கல் என்பதை உணர்த்தும் வகையிலும், இந்த ரவுண்டானாவில் அழகிய முட்டை வடிவில் அலங்கார பொம்மைகள் கான்கிரீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், ரவுண்டானாவிற்குள் பசுமையான புல்வெளிகள் மற்றும் செடிகளும் வளர்க்கப்பட உள்ளது. இது நாமக்கல் நகருக்குள் வருபவர்களை வரவேற்கும் வகையில் அமைய உள்ளது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றம் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




