Close
ஆகஸ்ட் 28, 2026 9:51 மணி

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: 2 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட்

கோப்பு படம்

அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து 2 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  எச்சரித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் (பொ) தலைமையில், அனைத்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மதுபாட்டில்களில் குறிப்பிட்டுள்ள, எம்ஆர்பி விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனைக் செய்யக் கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், மொத்தமாக விற்பனை செய்வது மற்றும் இதர குறைபாடுகள் குறித்து உதவி மேலாளர் மற்றும் வட்டாட்சியர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மதுபானங்களை பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதல் விலை மற்றும் பணியில் குறைபாடு கண்டறியப்பட்டதால் டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளர் நாமக்கல் பாலமுருகன், ராசிபுரம் உதவி விற்பனையாளர் சுந்தரம் ஆகியேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்றியப்பட்டால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top