திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெறுவதற்கு, கீழப்பாவூர் ஒன்றியக் கழக முன்னாள் செயலாளரும், கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், மாநில விவசாய அணி துணைச் செயலாளருமான கு. செல்லப்பா அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அவர்களுடன் இணைந்து, தென்காசி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், கு. செல்லப்பா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவருக்கு கருப்பு–சிவப்பு வேஷ்டி அணிவித்து, பெரியார் விருது பெறுவதற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கழகத்தில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கு. செல்லப்பாவின் கழகப் பணியைப் பாராட்டி வழங்கப்படும் இந்த விருது, அவரது அர்ப்பணிப்புக்கும் சேவைக்கும் கிடைத்துள்ள சிறப்பான அங்கீகாரமாக அமைந்துள்ளது. இந்த விருது, கழகத் தொண்டர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
விருது பெற உள்ள கு. செல்லப்பா அவர்களுக்கு ஜெயபாலன் மற்றும் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் பொன் செல்வன், ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.




