Close
ஏப்ரல் 24, 2026 5:41 காலை

சீற்றத்தைத் தூண்டிய ஈரானின் ஹிஜாப் அமலாக்க அதிகாரி மகளின் திருமண ஆடை

ஈரானிய மூத்த அதிகாரி அலி ஷம்கானியின் மகளின் திருமணக் காட்சிகளிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்க்ரீன்ஷாட்கள்.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மூத்த ஆலோசகரும், இராணுவத் தளபதியுமான அலி ஷம்கானியின் மகள் ஃபதேமாவின் திருமணம் பற்றிய வீடியோ ஒன்று தெஹ்ரானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கத்திய பாணியிலான இந்த ஆடம்பர விழாவும், மணமகள் அணிந்திருந்த உடையும், பெண்களுக்கு கடுமையான ஹிஜாப் சட்டங்கள் உள்ள ஒரு நாட்டில் ஆளும் வர்க்கத்தின் பாசாங்குத்தனம் பற்றிய குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தியுள்ளது.

தற்போது வைரலாகி வரும் இந்தக் வீடியோவில் 70 வயதான அலி ஷம்கானி தனது மகள் ஃபதேமாவை, கடந்த ஆண்டு தெஹ்ரானின் சொகுசு எஸ்பினாஸ் பேலஸ் ஹோட்டலில் நடந்த திருமண மண்டபத்தில் நடைபாதையில் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது.

மணமகள் ஃபதேமா, பலத்த ஆரவாரம் மற்றும் இசைக்கு மத்தியில் மண்டபத்திற்குள் நுழையும்போது, குறைந்த கழுத்துடன் கூடிய பட்டை இல்லாத (ஸ்ட்ராப்லெஸ்) வெள்ளை நிற கவுன் அணிந்து வருகிறார். நிகழ்வில் கலந்துகொண்ட பல பெண்கள் தலைக்கவசம் இல்லாமல் இருந்ததும் வீடியோவில் தெரிந்தது.

இது ஈரானிய சமூக ஊடக பயனர்கள் மற்றும் ஆர்வலர்களை, இஸ்லாமிய குடியரசின் அதிகார வர்க்கத்தின் “இரட்டை வாழ்க்கையை” கடுமையாக விமர்சிக்கத் தூண்டியது.

ஷம்கானி 2013 முதல் 2023 வரை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகப் பணியாற்றியவர். ஈரான் அரசின் கடுமையான ஹிஜாப் மற்றும் பொது ஒழுக்கக் கொள்கைகளை அமல்படுத்துபவர்களில் இவரும் ஒருவர்.

2022 ஆம் ஆண்டு 22 வயதுடைய அமினி, ஹிஜாப் சட்டங்களை முறையாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டில் தெஹ்ரானில் கைது செய்யப்பட்ட பிறகு, போலீஸ் காவலில் உயிரிழந்தார்.
அமினியின் மரணம் பெரிய அளவிலான போராட்டங்களைத் தூண்டியது. இந்தப் போராட்டங்களின்போது 500க்கும் மேற்பட்டோர், 68 குழந்தைகள் உட்பட கொல்லப்பட்டனர். ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்குவதற்குப் பின்னால் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இருந்தது

ஈரானில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதை அமல்படுத்த அரசு 80,000 போலீஸ் அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த திருமண வீடியோ வெளியானது “இரட்டைத் தரநிலைகள்” பற்றிய குற்றச்சாட்டுகளை வலுப்படுத்தியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் நாடு தவிக்கும் நேரத்தில், இந்த ஆடம்பரமான கொண்டாட்டமும் ஆளும் வர்க்கத்தின் செயல்களும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளன.
ஈரானின் மக்கள் தொகையில் பாதி பேர் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளனர். ஆண்டு பணவீக்க விகிதம் 42.4% மற்றும் வேலையின்மை விகிதம் 9% ஆகியவை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாடுகடத்தப்பட்ட ஈரானிய ஆர்வலர் மாசி அலினெஜாத்ட்விட்டரில் கூறுகையில் , ஆளும் மேல்மட்ட அதிகாரிகள் தங்கள் மகள்களை டிசைனர் ஆடைகளில் அணிவகுத்துச் செல்லும்போது, மற்றவர்களுக்கு அடக்கத்தைப் போதிக்கிறது. மேலும், ஈரானில் பெண்கள் தங்கள் தலைமுடியைக் காட்டுவதற்காக அடிக்கப்படுகிறார்கள் என்று விமர்சித்தார். .

இந்த வைரலான வீடியோவிற்கு பதிலளித்த ஸ்வீடிஷ்-ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலிரேசா அகோன்டி, இது பாசாங்குத்தனத்தின் வெளிப்பாடு. “அவருடைய தந்தைக்கு அதிகாரம் இருப்பதால் அவர் சுதந்திரமாக இருக்கிறாள்… இது இனி மதம் அல்ல. இது பாசாங்குத்தனம், ஊழல் மற்றும் பயத்தின் வெளிப்பாடு. சுதந்திரமாக சிந்தித்துத் தேர்ந்தெடுக்கும் பெண்களைப் பற்றிய பயம்,” என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top