Close
மார்ச் 7, 2026 5:07 மணி

அண்ணாமலையார் மாட வீதி சாலை பணிகள்: அமைச்சா் வேலு ஆய்வு

அண்ணாமலையார் மாட வீதி சாலை பணிகள்,ஆய்வு செய்த அமைச்சா்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில், 2-ஆவது கட்டமாக ரூ.15 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு  நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க ஒப்பந்தாரருக்கு அவா் அறிவுறுத்தினாா்.

மேலும், கான்கிரீட் சாலையின் தரத்தை நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தார். கான்கிரீட் சாலையில் மழைநீர் எளிதில் வடிந்து செல்லும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அதோடு, திருவண்ணாமலை வரும் ஆன்மிக பக்தர்கள் பயன்படுத்தும் பிரதான சாலை என்பதால், பணிகளை இரவு பகலாக மேற்கொண்டு ஜூலை இறுதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில், கான்கிரீட் சாலையின் மேற்பகுதி வழுவழுப்பாக இருந்தால் தேரோட்டத்துக்கு பாதிக்கும் என்பதால், புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக, விமான ஓடுதளம் அமைக்க பயன்படுத்தப்படும் சிலிப்பார்ம் பேவர் மிஷின் எனப்படும் நவீன இயந்திரத்தை பயன்படுத்தி இந்த சாலை அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் .தா்ப்பகராஜ், அண்ணாதுரை எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், நெடுஞ்சாலைத் துறை சிறப்பு அலுவலா் சந்திரசேகரன், கோட்டப் பொறியாளா் ஞானவேலு, மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top