Close
ஏப்ரல் 24, 2026 3:56 காலை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர் சங்கம்ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரேஷன் கடைகளில், தற்போது புளூடூத் மூலம் எலக்ட்ரானிக் எடை தராசு இணைக்கப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யும்போது, ஒரு ரேஷன் கார்டுக்கு பொருள் வினியோகம் செய்ய குறைந்தபட்சம், 10 நிமிடம் ஆகிறது. அதனால், நாள் ஒன்றக்கு, 50 கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருட்கள் வினியோகம் செய்ய முடிகிறது. அவற்றை முற்றிலும் நீக்குவதுடன், காலதாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்த வேண்டும்.

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து முதன்மை சங்கங்களுக்கு நுகர்வு செய்யப்படும் பொருட்களில், அரிசி 2 முதல், 5 கிலோ வரையும், சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள், ஒன்று முதல், இரண்டு கிலோ வரையும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன் கடை பணியாளர்களில், 40 சதவீதம் மகளிர், 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் பணியாற்றுகின்றனர். பணிச்சுமையை கருத்தில் கொண்டு, எடையாளர் ஒருவர் அனுமதிக்க வேண்டும். அதுவரை, வெளிப்பணி மூலம் உதவியாளர் ஒருவரை பணி அமர்த்திக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்.

விற்பனையாளரும், சங்கத்தின் எழுத்தரும் ஒரே பணி நிலையில் உள்ளதால், பதவி உயர்வில் எழுத்தர் பணியிடம் அனுமதிக்க வேண்டும்.

விற்பனையாளர்கள் மாவட்ட தேர்வாணைக்குழு மூலம் நியமனம் செய்யப்படும்போது, பணி மூப்பு வரிசை உறுதிபபடுத்தப்படுகிறது. அடுத்த பதவி உயர்வுக்கு, இதே பணி மூப்பை அடிப்படையாக கொண்டு அனைவருக்கும் பதவி உயர்வில் சமவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பவை உள்பட, 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top