மோகனூர் அருகே நடைபெற்ற ஆதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மோகனூர் தாலுகா, மணப்பள்ளி பஞ்சாயத்து, தீர்த்தாம்பாளையத்தில், ஆதிவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணி நடைபெற்று முடிந்துள்ளது. இதையொட்டி கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.
நேற்று அதிகாலை, 5 மணிக்கு, 2 ஆம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச்செல்லப்ட்டு, சிவாச்சாரியர்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிசேகத்தை நடத்தினார்கள்.
தொடர்ந்து, மூலவருக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீõபராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




