Close
மார்ச் 7, 2026 2:52 மணி

நாமக்கல் கருங்கல்பாளையம் அருகில் மேம்பாலம் அமைக்க மத்திய அமைச்சரிடம் எம்.பி. கோரிக்கை

நாமக்கல் கருங்கல்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க கோரி, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

நாமக்கல் கருங்கல்பாளையம் அருகே தொடர் விபத்து ஏற்படும் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

நாமக்கல் லோக்சபா எம்.பி. மாதேஸ்ரன், டில்லியில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அப்போது, சேலம் & கரூர் தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் கருங்கல்பாளையம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ஏற்கனவே நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உடனடியாக டெண்டர் வழங்கி பணிகளைத் துவக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், பொம்மைகுட்டைமேடு முதல் செல்வம் கல்லூரி வரை சர்வீஸ் ரோடு அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top