Close
மார்ச் 7, 2026 3:09 மணி

விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய விமானப்படையில், அக்னிவீர் திட்டத்தில் திட்ட ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் ஆட்சியர்’ துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகம், மற்றும் புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து இந்திய விமானப்படைக்கு அக்னிவீரர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு, அக்னிவீரர் ஆள்சேர்ப்பு முகாம் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வரும் செப்டம்பர் 2-ம் தேதி முதல் ஆண்களுக்கும், 5-ம் தேதி முதல் பெண்களுக்கும் நடைபெற உள்ளது.

50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான கல்வியில் ஏதேனும் ஒரு பிரிவு தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியின்படி 17 1/2 வயதுக்கு மேல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த தகுதி மற்றும் விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் செப்டம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ள ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்களை அக்னிபாத்வாயு.சிடிஏசி.இன் என்ற வெப்சைட்டில் அறியலாம்.

தகுதியுள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04286-222260 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top