முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற அமைதி பேரணியில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டார்.
முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி துவங்கியது.
மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமாரர், எம்.பி., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியில் கலந்துகொண்டார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்லை வகித்தனர்.
பரமத்தி ரோட்டில் செலம்பகவுண்டர் பூங்காவில் உள்ள கருணாநிதி சிலை வரை நடைபெற்ற அமைதி பேரணியில் திரளான திமுகவினர் கலந்துகொண்டனர். அங்கு கருணாநிதியின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர்ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ, நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் நவலடி, கவுதம், ஜெயபிரகாஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட திரளான திமுகவினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




