Close
மார்ச் 7, 2026 9:35 மணி

அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல் கரூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கைது

கோப்புப்படம்

நாமக்கல் அருகே அனுமதியின்றி லாரியில் மணல் கடத்திய, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் – திருச்சி மெயின் ரோடில், வளையப்பட்டி அருகில் அதிகாலை 5 மணியளவில், நாமக்கல் ஏஎஸ்பி., ஆகாஷ் ஜோஷி தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வளையப்பட்டி சமுதாயக்கூடம் அருகே அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில், உரிய ஆவணங்கள் இன்றி, கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் இருந்து, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதையடுத்து, மணல் கடத்திச் சென்ற, கரூர் மாவட்டம், கிழக்கு கோயம்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் (36) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 6 யூனிட் மணலை டிப்பர் லாரியுடன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top