தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, செல்வம் கல்லூரி, சி.எம்.எஸ். கல்லூரி, ஆர்.ஜி.ஆர். பள்ளி, ஜெய் விகாஸ் பள்ளி, பி.ஜி.பி., பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
காலை 9:30 மணி முதல், மதியம் 12:45 மணி வரை, ஓ.எம்.ஆர். விடைத்தாள் மூலமும், மதியம், 2:30 முதல், மாலை 5:30 மணி வரை, டிஸ்கிரிப்டிவ் எழுத்து தேர்வு முறையிலும் தேர்வு நடைபெற்றது.
இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து, 2,210 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை கண்காணிக்க 9 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு பறக்கும் படை, 2 நடமாடும் குழுக்கள், 9 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.
நடந்த தேர்வில் மொத்தம் 1,290 பேர் பங்கேற்றனர். 920 பேர் கலந்து கொள்ளவில்லை.




