Close
மார்ச் 7, 2026 4:23 மணி

நெல்லை மாநாடு குறித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பார்லியில் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா பேசிய பேச்சு குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் டாக்டர் செழியன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தங்கபாலு கூட்டத்தில் கலந்துகொண்டு, வருகிற 7ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர்,  ஓட்டுத்திருட்டு குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்  மக்களவையில் பேசிய பேச்சு குறித்த 64 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு, நிர்வாகிகளுக்கு வழங்கிப் பேசினார்.

நெல்லையில் 7ம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் மாநாட்டிற்கு, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து திரளானவர்கள் கலந்துகொள்வது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாநகர காங்கிரஸ் தலைவர் மோகன், ராசிபுரம் நகர காங்கிரஸ் தலைவர் முரளி, வட்டார தலைவர்கள் எருமப்பட்டி தங்கராஜ், சேந்தமங்கலம் குப்புசாமி, சேந்தமங்கலம் ஜெகநாதன், புதுச்சத்திரம் இளங்கோ, வெண்ணந்தூர் சொக்கலிங்கமூர்த்தி, டவுன் பஞ்சாயத்து காங்கிரஸ் தலைவர்கள் வெண்ணந்தூர் சிங்காரம், அத்தனூர் பூபதி, கா.நா.பட்டி கணேசன், மகளிர் காங்கிரஸ் ராணி, நாமக்கல் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் சாந்திமணி, தாஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜோதி, ஐஎன்டியுசி செல்வம், பழனிவேலு, பாலு, சதீஷ், சிவாஜி மன்றம் சந்திரசேகர் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top