Close
ஏப்ரல் 23, 2026 11:10 மணி

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகள் பெறும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று, தபால் ஓட்டுகளைப் பெற்று பதிவு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 9,159 மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி தபால் வாக்கு மூலம் ஓட்டுப்போடும் பணி துவங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்டி), நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 6 தொகுதிகளில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 5,249 பேர், மாற்றுத்திறனாளிகள் 3,910 பேர் என மொத்தம் 9,159 பேர் வீட்டிலேயே இருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்து படிவம் 12டி அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தகுதியுள்ள வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு, 6 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று 12ம் தேதி முதல், நாளை 13 மற்றும் 14 ஆகிய 3 நாட்கள் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top