வரும் 7ம் தேதி சனிக்கிழமை சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் மாலை 5 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இது குறித்து, இந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனரும், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் செயல் அலுவலருமான இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வருகின்ற 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திரகிரஹணம் ஏற்பட உள்ளது. இதனால் நாமக்கல் நகரில் உள்ள நரசிம்மர் சுவாமி கோயில், நாமகிரியம்மன் கோயில், ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ரங்கநாதர் கோயில்களில் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, இரவு 8 மணிக்கு பதிலாக, மாலை 5 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். அடுத்த நாள் 8ம் தேதி திருக்கோயில் பழக்க வழக்கப்படி பூஜைகள் நடைபெற்று, காலை 7 மணிக்கு கோயில்கள் நடை திறக்கப்படும். அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது




