Close
மார்ச் 7, 2026 8:01 மணி

திருவண்ணாமலையில் பௌா்ணமி முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

கிரிவலப் பாதையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சிய

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, பக்தா்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் கிரிவலப்பாதையில் ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:46 மணிக்குத் தொடங்குகிறது.

கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொடர்ந்து அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தியும், நேரில் சென்று ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகள், கிரிவலப்பாதை, கடைகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கிரிவலப்பாதையின் அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள சுகாதார வளாகத்தில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிா, முறையாக தண்ணீா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா, நெடுஞ்சாலைத்துறை சாா்பில் பராமரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தில் தண்ணீா் சுகாதாரமாக வருகிறதா என்று ஆய்வு செய்தாா்.

மேலும், ஈசானிய மைதான தற்காலிக பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து, ஆட்டோக்கள் முறையாக இயக்கப்படுவதை கண்காணிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கருணாநிதி, வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top