Close
ஏப்ரல் 24, 2026 5:21 காலை

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்டெம் ஆய்வகத்தை, சிஇஓ மகேஸ்வரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ரூ. 6 லட்சம் மதிப்பில் ஸ்டெம் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், மேத்ஸ் ஆகிய துறைகளைக் குறிக்கும் ஸ்டெம் என்ற புதிய ஆய்வகம், கல்வி மற்றும் தொழில் துறைகளில், இந்த நான்கு துறைகளில் உள்ள வாய்ப்புகளை மாணவர்கள் கண்டறியவும், இந்தப் துறைகளில் பணிபுரிய தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறது.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பயன் பெறும், கரூர் வைஸ்யா வங்கியின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில், புதிய ஸ்டெம் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவிற்கு கரூர் வைஸ்யா வங்கி வங்கியின் சிஎஸ்ஆர் புராஜக்ட் மேனேஜர்கள் வெங்கடேஷ், காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஇஓ மகேஸ்வரி குத்துவிளக்கேற்றி வைத்து ஸ்டெம் ஆய்வகத்தை துவங்கி வைத்தார்.

உதவித் திட்ட அலுவலர் அருள்தாஸ், பள்ளி துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top