Close
மார்ச் 7, 2026 4:41 மணி

போளூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

போளூர் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9 ஆயிரம் பேர் ஆர்வமுடன் மனுகொடுத்துள்ளனர். திட்டம் பொது மக்களிடையே சிறப்பாக செயல்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

போளூர் நகராட்சியில் முதல்வரின் முகவரி துறை சார்பில் போளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 18 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் ராணி மஹாலில் 5 வது நிறைவு முகாம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் உதவி இயக்குனர் தணிக்கை தலைமை தாங்கினார், அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

முகாமை நகர மன்ற தலைவர் ராணி சண்முகம் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏ சேகரன், நகர செயலாளர் தனசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார். மாவட்ட அயலக அணி அமைப்பாளர் சண்முகம், பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் ஆகியோர் தமிழக முதல்வரின் சீரிய திட்டமான உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் என்னென்ன மனுக்கள் தரலாம், பயன்கள் பெறலாம் என்பது குறித்தும் எவ்வாறு மனு கொடுப்பது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

முகாமில் 14 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்களை பெற்றனர். மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா, மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முகாமை பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,

இந்த முகாமின் முக்கிய நோக்கம், அனைத்து துறை சார்ந்த நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது, அதுவும் மக்களின் இருப்பிடம் தேடி, வாழ்விடm தேடி,வாசலை தேடி கொண்டு போய் சேர்ப்பது தான் மிக முக்கிய நோக்கம்

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நகராட்சி பகுதியில் 14 துறையைச் சேர்ந்த 45 சேவை என செயல்பட்டு வருகிறது. போளூர் நகராட்சியில் இது 5-வது முகாம். இதுவரை நடந்த முகாம்களுக்கும் தற்போது நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கும் களப்பணியாளர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அந்தந்த பகுதியில் வீடு வீடாக சென்று இந்த முகாமில் எத்தகைய சேவைகள் வழங்கப்படுகின்றன, எந்தெந்த துறை சேவைகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளித்தார்கள்.

எந்த மனுவிற்கு எந்தப் படிவங்கள் ஆவணங்கள் வழங்குவது என்பது குறித்தும் அறிவித்தார்கள். அந்த வகையில் நகராட்சியில் நடைபெற்ற 5 முகாம்களில் 9 ஆயிரம் படிவங்கள் வழங்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் களப்பணியாளர்கள் படிவங்கள் கொடுத்து முகாமிற்கு வரவைத்துள்ளனர். இது ஒரு சிறப்பான திட்டம். நமது மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இந்த நகராட்சியில் உள்ள மக்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

முகாமில் நகர மன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நகராட்சி பொறியாளர் கோபு நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top