வாழை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, நாமக்கல்லில் 24ம் தேதி இலவச பயிற்சி நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 24ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு, வாழை சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சியில், வாழை சாகுபடியில் முக்கிய ரகங்கள், கிழங்கு நேர்த்தி செய்தல், உரமேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, இலைவழி தெளிப்பு செய்தல், நீர் மேலாண்மை, ஊடுபயிர் செய்தல், மண் மற்றும் நீர் மாதிரி பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக விளக்கவுரையும், செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.
இதில் விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். முன்பதிவு செய்து கொள்ள 04286-266345, 266650, 9787788005 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




