Close
மார்ச் 7, 2026 4:17 மணி

ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 44.42 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணிக் கணக்கிடப்பட்டன

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தர்களின் காணிக்கையாக ரொக்கம் ரூ. 44 லட்சத்து 42 ஆயிரத்து 914 பெறப்பட்டுள்ளது.

ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி மற்றும் ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன. இதுபோல் கோட்டையின் மறுபுறம் ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில்களுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக ஆஞ்சநேயர் கோயிலில் 6 உண்டியல்கள், நரசிம்மர் கோயிலில் 4 உண்டியல்கள், ரங்கநாதர் கோயிலில் 2 உண்டியல்கள் என மொத்தம் 3 கோயில்களிலும் 12 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

4 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்படும். கடைசியாக கடந்த ஜூன் 20ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கணக்கிடப்பட்டன.

தொடர்ந்து நேற்று பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் அருள்குமார் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மாணவ மாணவிகள் மற்றும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரொக்கம் ரூ.44 லட்சத்து 42 ஆயிரத்து 914 ரொக்கம், தங்கம் 35 கிராம் 300 மி.கி., மற்றும் வெள்ளி 3.155 கிலோ 500 மி.கிராம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டது கணக்கிடப்பட்டது. உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையர்  இளையராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் செல்வசீராளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top