Close
மார்ச் 7, 2026 2:50 மணி

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தா

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி, தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 435 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார். அவற்றை பரிசீலனை செய்த ஆட்சியர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற, அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 70,500 மதிப்பில் பரிசு தொகை மற்றும் தகுதிச் சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 15,750 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலியினையும் வழங்கினார்.

கூட்டத்தில், டிஆர்ஓ சுமன், சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top