Close
மார்ச் 7, 2026 4:22 மணி

அண்ணாமலையார் கோயில் மாடவீதி திட்டப் பணிகள்: அமைச்சர் ஆய்வு

கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கான்கிரீட் தளம் மற்றும் மாநகராட்சி சார்பாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாடவீதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக முதற்கட்டமாக ரூபாய் 17 கோடி மதிப்பீட்டில் 01 கி.மீட்டர் தொலைவிற்கு நவீன இயந்திரம் கொண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் 1.7 கி.மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை பொதுப்பணிகள் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை கண்காணித்து வருகிறார்கள்.

அதன்படி மாடவீதிகளை சுற்றி நெடுஞ்சாலை துறை மூலமாக கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதையும் கள ஆய்வு மேற்கொண்டார். மீதம் உள்ளபணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் துரிதமாகவும் தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது  தமிழ்நாடு சட்டப்போவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி , ஆட்சியர் தர்ப்பகராஜ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி,  தலைமை செயற்குழு உறுப்பினர்  ஶ்ரீதரன், மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணைசெயலாளர் ப்ரியா விஜயரங்கன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், அரசு ஒப்பந்ததாரர் அருணை துரைவெங்கட், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கௌதமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top