Close
ஏப்ரல் 24, 2026 2:49 காலை

பாண்டியராஜபுரத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி

மதுரை மாவட்டம், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ-மாணவிக|ளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை அகப் பயிற்சி முகாம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் ராசி மற்றும் எஸ்.எஸ். மண்புழு உரப் பண்ணைகளில் 10 நாட்கள் நடந்தது.

இந்த முகாமை பாலமேடு பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். வேளாண்மை ஆசிரியர் முருகேஸ்வரி, முன்னிலை வகித்தார். தமிழ் ஆசிரியர் ஜெய்கணேஷ், வரவேற்றார்.

இந்த முகாமில், மண்புழு உர தொழிற்சாலை உரிமையாளர்கள் சரவணன், சுரேஷ், வேளாண்மை ஆசிரியர் நந்தினி, ஆகியோர் பயிற்சியளித்தனர்.

இதில், உரப் படுக்கை தயாரித்தல், செரிவூட்டப்பட்ட மண் கலவை தயாரித்தல், உரம் + சேகரித்தல், ஆட்டு உரம் தயாரித்தல், உரங்கள் சலித்தல், பிரித்தெடுத்தல், எடை போடுதல், சிப்பமிடுதல், பஞ்சகவ்யம் தயாரித்தல், ஹியூமிக் அமிலம் தயாரித்தல் உள்ளிட்டவை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top