மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் 66வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.
நாமக்கல் தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்ற தலைவர் கோட்டை மணிவண்ணன் தலைமை வகித்து, தியாகராஜ பாகவதரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நாமக்கல்லில் தியாகராஜ பாகவதருக்கு மார்பளவு சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் ராஜ்யசபா எம்பி., ராஜேஷ்குமார், அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
தியாகராஜ பாகவதரின் புகழை பரப்பும் வகையில் அவரது பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சியில் குமுதம் நாகராஜன், புதுப்பட்டி நடராஜன், ரவி, பூபதி, தியாகராஜன், செல்வம், வித்வான் பிரபு, மாதேஸ்வரன், சபரி, ஜெயராமன், நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




