திமுக உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு, உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகையை, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் ஒப்புதலின் பேரில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு உயர் கல்விக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமர், எம்.பி., தலைமை வகித்தார். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிஙகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொழிற்கல்வி படிக்கும் 12 பேருக்கும், பட்டப்படிப்பு படிக்கும் 4 பேருக்கும் என மொத்தம் 16 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.
ராசிபுரம், வெண்ணந்தூர், சேந்தமங்கலம், நாமக்கல் மோகனூர், புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திமுக கிளை, வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பிஎல்ஏ2 உறுப்பினர்களின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநில நிர்வாகிகள் ராணி, டாக்டர் மாயவன், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமா£ர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




