Close
மார்ச் 7, 2026 1:25 மணி

சத்துணவு திட்டப்பிரிவில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், சத்துணவு திட்டப்பிரிவில், தற்காலிக கம்ப்யூட்டர் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், சத்துணவுத் திட்டப் பிரிவில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • மாத சம்பளம் ரூ. 14 ஆயிரம் வீதம், தொகுப்பூதிய அடிப்படையில், தற்காலிகமாக ஒரு ஆண்டிற்கு நியமிக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தால் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கம்ப்யூட்டரில் எம்எஸ் ஆபீஸ் அனுபவம் பெற்றிருத்தல் இருத்தல் வேண்டும்,
  • ஆங்கிலம் மற்றும் தமிழ் லோயர் டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 21 முதல் 40 வயதிற்குள் இருக்கு வேண்டும்.

பணிக்கான விண்ணப்பங்களை உரிய கல்விச் சான்றுகள் மற்றும் அனுபவச் சான்றுடன் வருகிற நவ. 17ம் தேதி, மாலை 5 மணிக்குள், நாமக்கல், வகுரம்பட்டியில் உள்ள தமிழ்நாடு மாநில வழ்வாதார இயக்க அலுவலகத்திற்கு வந்துசேருமாறு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top