Close
மார்ச் 7, 2026 7:19 மணி

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி எதிரில் உள்ள டாஸ்மாக் மது கடையை அகற்ற வேண்டும்: பா.ம.க. கூட்டத்தில் தீர்மானம்

டாஸ்மாக்

மகாவீர் ஜயந்தியை முன்னிட்டு ஏப்.14 ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல் திருச்சி ரோட்டில், அரசு மகளிர் கல்லூரி எதிரில் இயங்கி வரும், டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற @வண்டும் என பாமக இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல், கரூர் மாவட்ட பா.ம.க., பாட்டாளி இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மனோஜ், மாநில மாணவரணி செயலாளர் பிரேம் பாலு, உழவர் பேரியக்க துணை செயலாளர் பொன் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கணேஷ்குமார் சிறப்பு அழைப்பாளாக பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில், பாக்கு கொட்டை பதப்படுத்தும் தொழிலாளர்கள் மீது, குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்திற்கு, நிலம் எடுப்பதை கைவிடக்கோரி, 150 போராட்டங்கள், 500க்கும் மேற்பட்ட நாட்கள் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தியும், இதுவரை 953 ஏக்கர் விளை நிலங்கள் அபரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு துரோகம் விளைவிக்கும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு மற்öறொரு தீர்மானம் நிறைவைற்றப்பட்டது.

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடந்து வரும் ஏகபோக போதைப் பொருட்கள் விற்பனையை போலீசார் தடுக்க வேண்டும். நாமக்கல், கரூர் மாவட்டங்களில், 24 மணி நேரமும் நடந்து வரும் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும். நாமக்கல் – திருச்சி மெயின் ரோட்டில் கவிஞர் ராமலிங்கம் அரசி மகளிர் கல்லூரிக்கு எதிரில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. இதனால் கல்லூரிக்கு சேல்லும் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே உனடியாக அந்த மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top