வெங்கமேடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த செயல்பாட்டிற்காக காமராஜர் விருது விழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
காமராஜர் விருது என்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பிற செயல்பாடுகளில் சிறந்து விளங்குவதற்காக வழங்கப்படும் மாநில விருது ஆகும்.
பொதுத் தேர்வுகளில் செயல்திறன், மேம்பாட்டுப் பணிகள் மற்றும் கலாச்சார மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கான பங்களிப்புகளின் அடிப்படையில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வெங்கமேடு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கலந்துகொண்டு, வெங்கமேடு அரசு நடுநிலைப் பள்ளிக்கு காமராஜர் விருது மற்றும் ரூ. 5 ஆயிரத்துக்கான காசோலையினை, பள்ளி தலைமை ஆசிரியை மாலதியிடம் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் சிஇஓ எழிலரசி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பச்சமுத்து மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




