Close
மார்ச் 7, 2026 2:33 மணி

மோகனூரில் ரூ.13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்.பி.

மோகனூர் அருகே கீழ் பரளியில் ரோடு அமைக்கும் பணியை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்.

மோகனூர் பகுதியில் ரூ. 13.48 லட்சம் மதிப்பில் ரோடு அமைக்கும் பணிகளை, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்.

மோகனூர் தாலுகா, பரளி ஊராட்சி பகுதியில், மண் ரோடுகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. அவற்றை கப்பி சாலையாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், கப்பி சாலை அமைக்க, ரூ. 13.48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, கீழ் பரளி பகுதியில் அரை கி.மீ. தூரம் கப்பி சாலை அமைக்கப்படுகிறது.

இப்பணியை, நாமக்கல் கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பி.டி.ஓ., இளங்கோ, கொ.ம.தே.க., ஒருங்கிணைந்த விவசாய அணி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் சசிகுமார், அவைத்தலைவர் பழனிமலை, மகளிரணி நிர்வாகிகள் பரமேஸ்வரி, சுதா, ஒன்றிய செயலாளர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top