Close
மார்ச் 7, 2026 4:17 மணி

உரிமை கோரப்படாத ரூ. 1.32 கோடி வங்கி டெபாசிட், இன்சூரன்ஸ் தொகைகளை உரியவர்களிடம் வழங்கிய கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத பேங்க் டெபாசிட் மற்றும் இன்சூரன்ஸ் தொகையை, உரிய பயனாளிகளிடம், கலெக்டர் துர்கா மூர்த்தி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில், உரிமை கோரப்படாத, ரூ. 1.32 கோடி மதிப்பிலான, வங்கி டெபாசிட்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் தொகைகளை 303 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மத்திய நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட்டுகள், இன்ஸ்சூரன்ஸ் தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம், நாமக்கல் டிஆர்டிஏ ஆபீசில் நடைபெற்றது.

இம்முகாமின் முக்கிய நோக்கம், நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கிகணக்குகள், நிலுவையில் உள்ள டெபாசிட்டுகள், இன்சூரன்ஸ் தொகைகள் போன்ற நிதி சொத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதும் சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் அல்லது அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகள், தங்களது உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை மீட்க உதவுவதாகும்.

அந்தவகையில் நாமக்கல் மாவட்டத்தில் 2,96,337 வங்கி கணக்குகளில் ரூ. 61.93 கோடி நிதி உரிமை கோரப்படாமல் நிலுவையில் உள்ளது. வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்புதொகைகள் இருப்பின், அவை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படுகின்றன.

இதனை பொதுமக்கள் தங்களது பேங்கின் வெப்சைட்டுகள் அல்லது ரிசர்வ் வங்கியின் வெப்சைட் மூலமாம் அறிந்துகொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் உரிமையாளர்கள் அல்லது அவர்களது சட்டபூர்வ வாரிசுகள் எந்தநேரத்திலும் இத்தொகைகளை கோரி பெறலாம்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், உரிமை கோரப்படாத, ரூ. 1.32 கோடி மதிப்பிலான, வங்கி டெபாசிட்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் தொகைகளை 303 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்  வழங்கினார்.

அனைத்து வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் இதர நிதிநிறுவன கிளைகளில் 1.10.2025 முதல் 31.12.2025 வரைதொடர்ச்சியாக இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி தங்களுக்கு சேரவேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top