Close
மார்ச் 7, 2026 4:40 மணி

கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கள் மறியல் போராட்டம்: 107 பேர் கைது

நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு, கோரிக்கைகளை வலியுத்தி, கிராம பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 107 தூயமைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சி.ஐ.டி.யு., சார்பில், தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம், தமிழகம் முழுவதும் நடந்தது. நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். எலச்சிப்பாளையம் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், ஐ.சி.டி.எஸ். பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க முன்னாள் செயலாளர் செங்கோடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஓ.எச்.டி., இயக்குனர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், டி.பி.சி. உள்ளிட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த உள்ளாட்சி தொழிலாளர்கள் அனைவரையும், அரசு உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்துக்களில் காலியாக உள்ள தூய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி. இயக்குனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 117 பேரை காவல்துறையினர்  கைது செய்து பஸ்சில் ஏற்றிச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top