நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா உத்தரவின் பேரில், நாமக்கல் அருகே உள்ள சின்ன முதலைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ஓவியப்போட்டி மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி தனராசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது.
தொடர்ந்து செல்வம் கலை-அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்துவதால் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்புகள் பற்றியும், உடல் நலம் பாதிப்பது குறித்தும், போதைப்பொருள் சம்மந்தமாக 10581 என்ற எண்ணிலும், டிரக்ஃப்ரீ தமிழ்நாடு என்ற செல்போன் அப்ளிகேஷன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் மாணவ மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.
ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




