Close
மார்ச் 7, 2026 9:35 மணி

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மற்றும் PSV பாலிடெக்னிக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம் இணைந்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 3000-ன் உடல் உறுப்பு தான மாவட்ட செயலாளர் மாருதி மோகன் ராஜா கலந்து கொண்டு பதிவு செய்யப்பட்ட உடல் உறுப்பு தானம் வடிவத்தினை வழங்க அதனை M.விமீகா, M.ஐயா பகத், சிலம்பரசன் கணேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்

நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் A.சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு உறுப்பு மாடற்று ஒருங்கிணைப்பாளர் L.சண்முகப்பிரியா கலந்து கொண்டு பேசும்போது உடல் ஆரோக்கியம் உள்ள ஒருவரோ, மரணம் அடைந்தவரோ, அல்லது மூளைச்சாவு அடைந்து (மூளை செயலிழந்து) இறக்கும் தருவாயில் உள்ளவரோ தன்னுடைய உடல் உறுப்பு அல்லது உடல் உறுப்பின் பகுதியையோ அந்த உறுப்பு தேவைப்படுபவர்களுக்கு வழங்கி அவர் உயிர் பிழைக்க உதவுவது உடல் உறுப்பு தானம்.

முழு உடல் தானம் என்பது மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி நோக்கத்திற்காக இறந்த பிறகு உங்கள் முழு உடலையும் தானம் செய்வதாகும். முழு உடல் தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடற்கூறியியல் துறையை தொடர்பு கொள்ளலாம். நீங்கள் இறந்த பின்பும் வாழ வேண்டுமா? உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் என்று கூறினார்

நிகழ்ச்சியில் மேனாள் தலைவர் R.சிவக்குமார் கல்லூரி முதல்வர் P.பிரேம்நாத் ரோட்டரி சங்க தலைவர் K.மகேஸ்வரி செயலாளர் P.காளிதாஸ் பொருளாளர் S.வீரபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக சங்கச் செயலாளர் R.சங்கர் நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top