மோகனூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் சீத்தப்பட்டி அருகில் உள்ள, ஐபிசி ஆசீர்வாத திருச்சபையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. பாஸ்டர் நேசக்குமாரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்
நாமக்கல் கொமதேக., எம்.பி. மாதேஸ்வரன் விழாவில் கலந்துகொண்டு, அனைவருக்கும் கேக் வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார். விழாவில் பயனாளிகளுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திசா கமிட்டி உறுப்பினர் ரவிச்சந்திரன், கொமதேக பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைவர் பச்சைத்துண்டு பழனிமலை, வர்த்தக அணி செயலாளர் குரு இளங்கோ, மாவட்ட மகளிரணி செயலாளர் பிரேமலதா, ஒருங்கிணைந்த மோகனூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் சுதா, ஒன்றிய செயலாளர்கள் நவலடி. பரளி குப்புசாமி, நகர செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




