Close
ஏப்ரல் 23, 2026 11:26 மணி

போலீஸ் எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல்லில் உடற்தகுதி பயிற்சி

கோப்புப்படம்

காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடற்தகுதி பயிற்சி வகுப்பு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை டிச.31ம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

காவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, அடுத்த கட்டமாக நடக்கும் உடல் அளவீடு சோதனை மற்றும் உடல் திறன் சோதனை தேர்வில் வெற்றி பெற, உரிய வகையில் உடற்தகுதி பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறுகிறது.

இத்தேர்வுக்கான இலவச உடற்தகுதி பயிற்சி வகுப்புகள், நாளை டிச.31ம் தேதி காலை, 6:30 முதல் 9:00 மணி வரையிலும், மாலை 4:00 முதல் 6:30 மணி வரையிலும் நடக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரங்களை 04286 -222260 என்ற தொலைபேசி மூலமோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம்.

தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நடந்த எழுத்து மற்றும் உடற்தகுதி இலவச பயிற்சி வகுப்பில் பயின்று, 2022 முதல், 2024 வரை, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் எஸ்.ஐ., தேர்வில் 17 பேர், போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் 54 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ளனர்.

மேலும், தற்போது வெளியிடப்பட்ட சீருடைப்பணியாளர் வாரிய போலீஸ் கான்ஸ்டபிள் எழுத்து தேர்வில், 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top