நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில், இறுதியாண்டு படிக்கும் 750 மாணவிகளுக்கு தமிழ அரசின் இலவச மடிக்கணினிகளை, மாநிலங்களவை உறுப்பினர். ராஜேஷ்குமார் வழங்கினார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, உலகம் உங்கள் கையில் எனும் திட்டத்தின் கீழ் இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.
இதையொட்டி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு 750 மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கிப் பேசியதாவது:
தமிழகத்தில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மகளிர் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பார்க்கும்போது, பெண்களும் சமுதாயத்தில் சமநிலை பெற வேண்டும், அனைவரும் கல்வி கற்க வேண்டும், பணிக்கு செல்ல வேண்டும், பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று மகாகவி பாரதியார் பாடிய கவிதைகள் நினைவிற்கு வருகிறது.
மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மடிக்கணினி பரிசு பொருள் அல்ல, அது அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு செய்கின்ற முதலீடு என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மடிக்கணினிகள், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகள் லேப்டாப்களை அறிவு வளர்ச்சிக்கு முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அவர் கூறினர்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, கல்லூரி முதல்வர் மாதவி, துறைத்தலைவர்கள் எமீமாள் நவஜோதி, சர்மிளா பானு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




