Close
மார்ச் 7, 2026 2:51 மணி

எலச்சிபாளையம் அருகே ஆவின் பொங்கல் திருவிழா: மாட்டு வண்டியை ஓட்டிவந்த அமைச்சர்

எலச்சிபாளையம் அருகே நடைபெற்ற, ஆவின் பொங்கல் திருவிழாவில், பால்வளத்துறை அமைச்சர் தங்கராஜ் கலந்துகொண்டு, மாட்டு வண்டியை ஓட்டிச்சென்றார்.

எலச்சிபாளையம் அருகே நடைபெற்ற ஆவின் பொங்கல் திருவிழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாட்டு வண்டியை ஓட்டிவந்து கலந்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பொம்மம்பட்டி ஊராட்சி காட்டூர் கிராமத்தில், பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் மதிவாணன் தோட்டத்தில், ஆவின் மாட்டுப் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

மாவட்ட ஆத்சிஉஅர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, பால்வளத்துறை நிர்வாக இயக்குனர் ஜான்லூயிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் விழாவில் கலந்துகொள்வதற்காக சுமார் 500 மீட்டர் தூரம், அவரே மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தார்.

தொடர்ந்து அமைச்சர், விவசாய சங்க உறுப்பினர்களுடன், புதுப்பானையில் பச்சிரிசி, வெல்லமிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும், அங்கிருந்த கால்நடைகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஆகியோருடன் கிராமிய முறையில் கயிற்று கட்டிலில் அமர்ந்து கலந்துரையாடி, அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்.

நிகழ்ச்சியில், டிஆர்ஓ சரவணன், எலச்சிபாளையம் அட்மா குழு தலைவர் தங்கவேல், ஆவின் பொது மேலாளர் சண்முகம், துணைப்பதிவாளர் (பால்வளம்) சண்முகநதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top