Close
மார்ச் 7, 2026 6:04 மணி

ஈரோடு மோசடி பைனான்ஸ் சொத்துக்கள்: நாமக்கல்லில் வரும் 30ம் தேதி ஏலம்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அன்னை இன்போ டெக் என்ற பைனான்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பணத்தை டெபாசிட் பெற்ற திருப்பி வழங்கவில்லை. இதையொட்டி அந்த நிறுவனத்தின் மீது, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

தற்போது, பைனான்ஸ் நிறுவன சொத்துக்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் எதிரிகளுக்கு சொந்தமான, அசையா சொத்தான குமாரபாளையம் அக்ரஹாரத்தில் உள்ள, 1,180 சதுர அடி கொண்ட வீட்டு மனையினை, வருகிற 30ம் தேதி மாலை 3 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில், பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது.

நாமக்கல் கலெக்டர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள, 2 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், 8 வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஏல நிபந்தனைகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், ஏல தேதிக்கு முன்பாக, ஈரோடு, பொருளாதார குற்றப் பிரிவு, போலீஸ் டிஎஸ்பி மூலம் ஏல சொத்தினை பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top