Close
மார்ச் 7, 2026 1:16 மணி

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களில நாளை ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், செல்போன் நம்பர் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை மேற்கொள்ளவும், ரேஷன் கடைகளின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம், நாளை மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களிலும் நடைபெறுகிறது.

நாளை 24ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர், கொல்லிமலை, பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 8 தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது.

சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், முகாமில் கலந்துகொண்டு, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் தங்களின் ரேஷன் கார்டு சம்மந்தமான குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top