நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், வரும் 30ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, மாவட்டத்தில் வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.




