Close
மார்ச் 7, 2026 7:19 மணி

காவிரி-சரபங்கா-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் பாடுபடும்: மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேச்சு

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று, டாக்டர் செந்தில் பேசினார்.

மேட்டூர் அணை காவிரி உபரிநீரை சரபங்கா, திருமணி முத்தாறில் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டாக்டர் செந்தில், நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் பதவியேற்பு விழா நாமக்கல்லில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, டாக்டர் செந்திலுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார்.

தொடர்ந்து மாவட்ட காங். தலைவர் டாக்டர் செந்தில் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. நெல், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை முக்கிய விளைபொருட்களாக உள்ளது. கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் கினறுகள் வறண்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே காவிரி உபரி நீரை சரபங்கா மற்றும் திருமணி முத்தாறுடன் இணைப்பதால் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

நாமக்கல்லில் கோழி வளர்ப்பு, முட்டை ஏற்றுமதி, லாரி போக்குவரத்து மற்றும் ரிக் வண்டிகள் மற்றும் ஜவுளி உற்பத்தித் தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. மத்திய அரசின் பல்வேறு வரி விதிப்பால் இந்த தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. இதனால் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.

வேலைவாய்ப்புக்காக மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர். குறிப்பாக நாமக்கல் சட்டசபை தொகுதியில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

காவிரி, சரபங்கா, திருமணி முத்தாற்றை இணைப்பதற்கும், தொழில் வளத்தை பெருக்குவதற்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.க்கள் ராஜேஷ்குமார், மாதேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து மாவட்டத்திற்கான திட்டப்பணிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குள் உள்ள விருப்பு வெறுப்புகளை மறந்து தலைவர் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த பாடுபட வேண்டும் என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வீரப்பன், சீனிவாசன், செல்வராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோ, குப்புசாமி, மாநகர காங்கிரஸ் தலைவர் மோகன், சாந்திமணி உள்ளிட்ட திரளான காங்கிரசார் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top