Close
மார்ச் 7, 2026 1:16 மணி

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவது குறித்து, அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் துர்கா மூர்த்தி பேசினார்.

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது குறித்து, அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டவுடன் முதல் 3 நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துதல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மனிதவள மேலாண்மை, பயிற்சி மேலாண்மை, கம்ப்யூட்டர் மையம், விழிப்புணர்வு, சட்டம் ஒழுங்கு, எலக்ட்ரனிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக்கருவி மேலாண்மை, நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துதல், செலவு கணக்கு கண்காணிப்பு, வாக்குச்சீட்டு, மாதிரி வாக்குசீட்டு, ஊடகம் கையாளுதல், வாக்காளர் பட்டியல் மேலாண்மை, வாக்காளர் உதவிமையம், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, குறைதீர்க்கும் மையம், தேர்தல் பார்வையாளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், கண்காணிப்பு மற்றும் தொடர்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்படுவது குறித்து, தொடர்பு அலுவலர்களுடன் கலெக்டர் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கினார்.

கூட்டத்தில், டிஆர்ஓ சரவணன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், தேர்தல் பிரிவு தாசில்தா செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top