Close
செப்டம்பர் 7, 2026 7:22 மணி

மதுரையில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரம்: வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை

புதுச்சேரியில் மார்ச் 1ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மாலை 3 மணிக்கு மேல் பிரதமர்  மோடி‌.மதுரை வருகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதில், தமிழ்நாடு – கேரளாவை இணைக்கும் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் திறந்து வைக்கிறார். மேலும், மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியான வான் கட்டுப்பாட்டு அறை கட்டிடத்தையும் திறந்து வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்து, மதுரை மண்டேலா நகர் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக டிடிவி தினகரன், பாமக அன்புமணி ராமதாஸ், ஜி கே வாசன் ஐ .ஜே .கே. நிறுவனர் பாரிவேந்தர், ஜான்பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.

மதுரை நகர் பகுதியில் பிரதமர் பங்கேற்கும் தேசிய ஜனநாயக பொதுக்கூட்டத்தில் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக காவல்துறை சார்பாக வெடிகுண்டு தடுப்பு குழுவினர் ஐந்து மாவட்ட குழுவினரை வரவழைக்கப்பட்டு மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top