சனி பகவான், மார்ச் மாதம் 6..ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் மீன் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதையொட்டி, மதுரை அருகே சோழவந்தான் சனீஸ்வரன் ஆலயத்தில் காலை 8 மணிக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
அதேபோல, மதுரை மாவட்டம், சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் அருள்மிகு பிரளயநாத விசாக நட்சத்திர தலத்தில், மார்ச் மாதம் 6..ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, இக் கோயிலில் வன்னி மரத்தடியில் அமைந்துள்ள சனீஸ்வர லிங்கம், சனி பகவான் சன்னதியில் சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம் அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் இளமதி, கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில் மணி, கணக்கர் சி. பூபதி மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல, மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் , சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 8…மணிக்கு சனிப்பெயர்ச்சி மஹா யாகம், அபிஷேகம், அர்ச்சனைகள் நடைபெறுகிறது.




