Close
ஏப்ரல் 24, 2026 3:56 காலை

நாமக்கல் நரசிம்ம சாமி பங்குனித் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

நாமக்கல் நரசிம்மர் சாமி கோயிலில் பங்குணி தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தின் மறுநாளன்று சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி காலை 7 மணிக்கு நரசிம்மர் கோயில் முன்பு உள்ள கொடிமரத்திலும், அரங்கநாதர் கோயில் முன்பு உள்ள கொடிமரத்திலும் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினார்கள்.

தொடர்ந்து இரவில் சுவாமி அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. நாளை 26ம் தேதி இரவு சிம்ம வாகனத்திலும், நாளை மறுநாள் 27ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 28ம் தேதி கருட வாகனத்திலும், 29ஆம் தேதி சேஷவ õகனத்திலும், 30ம் தேதி யானை வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மார்ச் 31ஆம் தேதி நரசிம்மர், அரங்கநாதர் திருக்கல்யாணம் குளக்கரை மண்டபத்தில் நடைபெறும். ஏப்., 1ம் தேதி சுவாமி குதிரை வாகனத்தில் திருவேடுபரி உற்சவம் நடைபெறும்.

ஏப்.2ம் தேதி காலை 8:30 மணிக்கு கோட்டை பகுதியில் நரசிம்மர் சாமி தேரோட்டமும், மாலை 4:30 மணிக்கு மெயின் ரோட்டில் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெறும். ஏப். 7 மற்றும் 8ஆம் தேதிகளில் ஊஞ்சல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகøள் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top