நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில், நாமக்கல் மாநகராட்சி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் உத்தரவின் பேரில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் பகுதிகளில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை வலியுறுத்தி, பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு, சட்டசபை தேர்தலில் அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழியேற்றனர். வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜான், நந்தினி மற்றும் களப் பணி உதவியாளர் சபரிநாதன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




