திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா, ஏப்ரல் 20, பந்தக்கால் முகூர்த்தத்துடன் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த விழா ஏப்ரல் 30 வரை நடைபெறும்.
இந்த வசந்த உற்சவ விழாவில் அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் உற்சவம் மற்றும் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெறும். நிறைவாக, ஏப்ரல் 30 அன்று காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதே நாள் இரவு கோபால் விநாயகர் கோயிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், பின்னர் இரவு 11 மணிக்கு மேல் கொடிமரம் அருகில் மன்மத தகனமும் நடைபெறும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா, மகா சிவராத்திரி விழா போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி சித்திரை மாதத்தில் இக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ 10 நாட்கள் நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழாவானது இன்று புதன்கிழமை தொடங்கி வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவையொட்டி கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
அதனைத் தொடர்ந்து சம்பந்த விநாயகர் ஆலயத்தில் பந்தக்காலுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கோவிலில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட பந்தக்கால் சம்பந்த விநாயகர் ஆலயத்திற்கு அருகே சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கோவில் பிச்சகர் விஜயகுமார் மற்றும் ரகுராமன் முன்னிலையில் வெகு விமர்சையாக பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து உச்சிக்கால அபிஷேகம், தொடா்ந்து தினமும் இரவில் மண்டகபடி நிகழ்ச்சிகளும் சாமிக்கு பூ கொட்டும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
விழாவின் நிறைவாக 30-ஆம் தேதி காலை ஐயங்குளத்தில் தீா்த்தவாரியும், அன்றிரவு கோபால விநாயகா் கோயிலில் மண்பகபடியும் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, கோயில் கொடிமரம் முன் இரவு 11 மணிக்கு மேல் மன்மத தகனம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.





