தமிழகத்தில் தற்போது சோதனை அடிப்படையில் பத்திரப் பதிவுகள் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. 6 மாதத்தில் முமுமையாக அமல்படுத்தப்படும் என தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஸ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.
தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஸ் தமிழ்செல்வன் இது குறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களுக்கு பயனிக்கும் அனைத்து திட்டங்களையும் பெற்று, நாமக்கல் மாவட்டத்தை மாநிலத்தில் முதல் மாவட்டமாக, முன் மாதிரி மாவட்டமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நாமக்கல் ஒரு தொழில் நகரம், தொழில் மாவட்டம். இங்கு, லாரிகள், ரிக் வண்டிகள், கோழிப்பண்ணை, விவசாயம், நெசவு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நிறைந்த காணப்படுகிறது. மேலும், கல்வி மாவட்டமாகவும் திகழ்கிறது.
இந்த மாவட்டத்தில், தொழில் வளர்ச்சிக்கான பணிகள் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படும். மாநிலம் முழுவதும் பத்திரப் பதிவுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது. 6 மாதங்களுக்கு பின் முழுமையாக நடைமுறைக்கு வரும்.
அனைத்து துறைகளிலும் லஞ்ச லாவண்யம் கூடாது என முதல்வர் விஜய் எங்களை அறிவுறுத்தியுள்ளார். லஞ்சம் கொடுத்தாலும் தவறு. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். எந்த துறையாக இருந்தாலும், அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், எங்களிடம் தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.




